அழகு என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று...நான் அழகை மிகவும் ரசிப்பவள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்னும் அந்த இடத்தை விட்டுக் குடுக்காமல் அழகாக இருப்பவர் நான் எப்பொழுதும் ரசிக்கும் ஒரு பெண் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான்.
அந்த வகையில் ஒரு நாள் இணையத்தளத்தில் அழகு குறிப்புகள் மற்றும் பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகளையும் தேடிக்கொண்டு இருந்தபோது ஒரு இணைய தளம் வெகுவாக என்னைக் கவர்ந்தது.
தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன் அனால் முழுவதுமாக வாசிக்கவில்லை ஏன் என்றால் என்னால் பொறுமையாக படிக்கும் அளவிற்கு அப்பொழுது மனது இல்லை..
சிலபேரை நாம் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருப்போம் அவ்வளவு ஈர்ப்பு அவர்களிடம் இருக்கும் இன்னும் சிலரை பார்த்தால் ஏன் பார்த்தோம் என்று கூட நினைப்போம் அது அவர்கள் குறை இல்லை நம் மனது பார்க்கும் கோணம் அப்படி.
ஆனால் இந்த பெண்ணை நான் பார்த்ததில்லை ஆனால் ஏன் என்று தெரியவில்லை இந்த பெண்ணிடம் என்குறைகளை சொன்னால் என்ன என்று என்மனத்திற்கு தோன்றியது. உடனே அந்த பெண்ணிற்கு என் குடும்ப கஷ்டங்களை எல்லாம் சொல்லி ஒரு மெயில் அனுப்பினேன்.
எதுவும் உடனே கிடைத்து விட்டால் அதன் மதிப்பு பெரிதாகத் தெரியாது எனக்கும் உடனே அவர்கள் பதில் அளிக்கவில்லை தொடர்ந்து ஒரு நாளுக்கு பல முறை என் மெயிலை செக் செய்ய ஆரம்பித்தேன்.
என்மனதிற்கு ஒரு பழக்கம் உண்டு எதாவது ஒன்றை நான் தேடுகிறேன் என்றால் அதனிடம் இருந்து சின்ன அசைவுகள் வந்தால்கூட மனதில் அலாரம் அடிக்கும் அது போல் ஒரு நாள் மட்டும் மனது உந்திக்கொண்டே இருந்தது மெயில் பார் என்று.
நானும் என் மெயிலை திறந்து பார்த்த போது இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது அந்த பெண்ணிடம் இருந்து பதில் வந்திருந்தது நம்ப முடியவில்லை அதில் ஆரம்பித்தது தான் எங்கள் நட்பு ,,,
அந்த நட்பின் தாக்கம் ஐஸ்வர்யா ராயை கூட மறக்க வைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் (ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் ஒரு பெண்ணே பெண்ணை ரசிப்பது கொஞ்சம் அரிது அதிலும் நான் ரசிப்பது ரொம்பவே அரிது அதனால் தான் ஐஸ்வர்யா ராயை கூட என்று அழுத்தமாக சொன்னேன்).
அந்த அளவிற்கு என்மனதை அவர் எவ்வளவு ஆக்கிரமித்து இருப்பார் என்று புரிந்து கொள்ளுங்கள். அது எப்படி என்று இன்னும் விரிவாக வரும் பதிவுகளில் சொல்கிறேன்...